நரகத்தில் ஒரு நிமிடம்

 பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான்  முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! அப்பப்பா , நரகத்திற்கு சென்று  வந்ததை  போல இருந்தது படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால்அதில் தண்ணீருக்கு பதில்  ரத்தம் ! 


விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அவனது தோல் பட்டையில் இருந்து பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தனக்கெண்ணவோ ஒன்று நடக்கிறது என்று உணர , தொண்டை வறண்டது . இந்த முறை  தண்ணி குடிக்க பிரிட்ஜை  நோக்கி விரைந்தான் . பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதுவும் ஒவ்வொன்றும் வேறு வயதுடைய சடலங்கள் . . அதில்  சிதலாமடைந்த ஒரு பாட்டியின் சடலம் வாயை பிளந்தபடி முறைத்தது . 



இவற்றைபார்த்ததில் முகுந்திற்கு இதயத்துடிப்பு அதிகரித்து வாந்தி வருவது போல இருந்தது . உடனடியாக பாத்ரூம் சென்றுவாந்தி எடுத்தால் , வாயிலிருந்து  பூச்சிகளாக கொட்டின ! பின்னங்கால் பிடறியில் அடிக்க வெளியில் வந்து போனை எடுத்தான் .


 அந்த அலைபேசியில் யாரையோ அழைக்க முயல , எதிர் தரப்பில் யாரும் வராமல்  அழுகை குரல்கள் மட்டுமே கேட்டன ! வீடியோ கால் செய்தால் , இவன் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் ஓட்டைகள் ! இதய துடிப்பு இவனது காதிற்கே கேட்டது . சடாரென போனை விட்டெரிந்து சாமி அறை பக்கம்  ஓட , திடீரென சாமி இருந்த அறை பூமியில் புதைந்தது , ஒரு முடிவில்லா  பள்ளமே இவனை வரவேற்றது . 


என்னடா இது என்று கதறி அழ ஆரம்பித்தால் , சிரிப்பு மட்டுமே வந்தது . நமக்கு மட்டும் தான் இப்படியா இல்லை நாடு முழுகலாவே இப்படித்தானா என்று கண்டுபிடிக்க தொலைக்காட்சியை போட்டால்எந்த பொத்தானை  அழுத்தினாலும் பேய் வந்து நிற்கிறது . அதிலிருந்து வெளியே வர வேறமுயற்சி செய்கிறது . கொடுமையின் உச்சி என்னவென்று முகுந்த் உணர்ந்துகொண்டே இருந்தான் .


போதுமடா சாமி என்று வீட்டை விட்டு ஓட  கதவை திறந்தால் , இவனது காலில் எரிமலையின் குழம்பு பட்டது. நிமிர்ந்து பார்த்தால் வீடே குழம்பில் தான் மிதந்து கொண்டு இருக்கிறது , தலை கிருகிறுத்து செத்து தொலைவோம் என்று கிழே குதித்தான்தரையே தென்படவில்லை . விழுந்து கொண்டே இருந்தான்.


 பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான் முகுந்த்.


பிகுமுதல் நாள் இரவுதான் முகுந்து முதல் முறையாக கஞ்சா அடிதிருந்தான் . அடித்தவன்சும்மா இல்லாமல் , பேய் படம் பார்த்து சிரத்தபடியே  நரகத்திற்கு சென்றான் . 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.